தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 5 March 2023 7:54 PM GMT (Updated: 6 March 2023 11:02 AM GMT)

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

திருவையாறு அருகே உள்ள திருச்சோற்றுதுறை கீழத்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது49). தொழிலாளி. இவருடைய மனைவி சுசீலா (42). இவர்களுக்கு வசந்த் (23) என்ற மகனும், ஸ்வேதா (21) என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. சிவக்குமார் தனது மனைவி, மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சிவக்குமார் அடிக்கடி மது குடித்துள்ளார். இதை சுசீலா கண்டித்துள்ளார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன வேதனை அடைந்த சிவக்குமார் நேற்று முன்தினம் தனது வீட்டு மாடியில் உள்ள அறையில் வேட்டியால் தூக்குப்போட்டுக்கொண்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று அவரை மீட்டு திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story