கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 March 2023 12:03 AM IST (Updated: 9 March 2023 4:12 PM IST)
t-max-icont-min-icon

கந்தம்பாளையம் அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

கந்தம்பாளையம்

கந்தம்பாளையம் அருகே உள்ள கவுண்டிபாளையம் அடுத்த பொம்மக்கா பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது36). இவர் கூலி வேலை செய்து வந்தார். அவரது மனைவி ராஜேஸ்வரி (34). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சதீசுக்கு விபத்து ஏற்பட்டது. இதனால் அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனவேதனையில் இருந்த சதீஷ் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story