காவேரிப்பட்டணத்தில்பிளம்பர் தூக்குப்போட்டு தற்கொலை


காவேரிப்பட்டணத்தில்பிளம்பர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2023 7:00 PM GMT (Updated: 18 March 2023 10:16 AM GMT)
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அண்ணா நகரை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 24). பிளம்பர். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிவசங்கர் கடந்த 16-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story