காரிமங்கலம் அருகேஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காரிமங்கலம் அருகேஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 April 2023 7:00 PM GMT (Updated: 8 April 2023 9:17 AM GMT)
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகராறு

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த புல்லுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்- கிருஷ்ணவேணி தம்பதியரின் மகள் அனிதா (வயது 24). இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே கமலாப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாதேஷ் மகன் ராமு என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அனிதா தனது தாயாரிடம் போனில் என்னால் இனிமேல் கணவர் வீட்டில் இருக்க முடியாது என்னை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என கூறினாராம்.

விசாரணை

இதையடுத்து தாயார் வீட்டுக்கு வந்த அனிதா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதனை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனிதாவை மீட்டு கார் மூலம் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அனிதா இறந்துவிட்டாதாக டாக்டர் கூறினார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story