விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 12 April 2023 7:00 PM GMT (Updated: 13 April 2023 9:27 AM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அரசனட்டியை சேர்ந்தவர் சந்திரப்பா. இவருடைய மனைவி அமராவதி (வயது 33). குடும்ப பிரச்சினை காரணாக இவர் கடந்த 5 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அமராவதி இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அமராவதி கடந்த 7-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமராவதி இறந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story