விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

புதுச்சத்திரம் அருகே விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணியை சேர்ந்தவர் ஜெயபால். அவரது மகன் அஜித்குமார் (வயது 30). டிரைவர். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 8-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் அஜித்குமாரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தநிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





