புதுச்சத்திரம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் தற்கொலை

நாமக்கல்:
புதுச்சத்திரம் அருகே உள்ள கண்ணூர்பட்டி அண்ணா நகர் காலனியில் வசித்து வந்தவர் செல்வராஜ் (வயது 47). இவர் குமரவேலிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று வீட்டில் தனியாக இருந்த செல்வராஜ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை புதுச்சத்திரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





