நல்லம்பள்ளி அருகேதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே கொப்பக்கரை கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த மாணிக்கம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணிக்கம் உயிரிழந்தார். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





