கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

ஓசூர்:
சூளகிரி தாலுகா சாமனப்பள்ளி அருகே உள்ள சீபம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). கூலித்தொழிலாளி. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த சீனிவாசன் கடந்த 29-ந் தேதி ஓசூர் அருகே காரப்பள்ளியில் உள்ள வீட்டில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இறந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





