அரூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


அரூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 May 2023 6:45 PM GMT (Updated: 3 May 2023 6:45 PM GMT)
தர்மபுரி

அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 27). தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தபோதும், உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென திருநாவுக்கரசு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு உயிரிழந்தார். இதுதொடர்பாக அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story