விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 5 May 2023 7:00 PM GMT (Updated: 5 May 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

உள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சி காலிகட்டா கிராமத்தை சேர்ந்தவர் திம்மராஜ். விவசாயி. இவருக்கு மல்லிகா (32) என்ற மனைவியும், 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மல்லிகா வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கினார். பின்னர் அவர் மீட்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகா நேற்று காலை இறந்தார். இதுகுறித்து மல்லிகாவின் தந்தை மாதேஷ் தேன்கனிக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story