பாப்பாரப்பட்டி அருகேமருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை


பாப்பாரப்பட்டி அருகேமருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை
x
தினத்தந்தி 7 May 2023 7:00 PM GMT (Updated: 7 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே மருந்து விற்பனை பிரதிநிதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மருந்து விற்பனை பிரதிநிதி

பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 35). மருந்து விற்பனை பிரதிநிதி. இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கார்த்திகேயன் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக மனைவி சம்பூரணி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டுக்கு சென்று தனது அறையில் தூக்குப்போட்டு கொண்டார்.

விசாரணை

இதனை ஜன்னல் வழியாக பார்த்த மனைவி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். பின்னர் உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் தொங்கிய கணவரை மீட்டு பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாப்பாரப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story