கூலித்தொழிலாளி எலி மருந்து தின்று தற்கொலை


கூலித்தொழிலாளி எலி மருந்து தின்று தற்கொலை
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஆலப்பட்டியை சேர்ந்தவர்சின்னராஜ் (வயது 65). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. கடந்த 8-ந் தேதி மது போதையில் அவர் எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சின்னராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கே.ஆர்.பி. அணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story