நல்லம்பள்ளி அருகேவிஷம் தின்று பெண் தற்கொலை


நல்லம்பள்ளி அருகேவிஷம் தின்று பெண் தற்கொலை
x
தினத்தந்தி 15 May 2023 12:30 AM IST (Updated: 15 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள எட்டியானூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சாலம்மாள் (வயது 33). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் சாலம்மாளுக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் விஷம் தின்று மயங்கினார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சாலம்மாளை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாலம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story