கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு இடங்களில் விவசாயி உள்பட 4 பேர் தற்கொலை


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு இடங்களில் விவசாயி உள்பட 4 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 24 May 2023 7:00 PM GMT (Updated: 24 May 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விவசாயி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பெண்கள்

கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி சத்யா (வயது 42). குடும்ப பிரச்சினை காரணாக மனமுடைந்த சத்யா, கடந்த 23-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி ஜமீல் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மனைவி பிரேமாவதி (53). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் கடந்த 22-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவசாயி, கடை ஊழியர்

நாகரசம்பட்டி அருகே தளிஅள்ளி குட்டையன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கவரன் (53). விவசாயி. உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் கடந்த 16-ந் தேதி தனது நிலத்தில் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை இந்திரா நகரை சேர்ந்தவர் கார்த்திக் (24). கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக இவர் கடந்த 23-ந் தேதி குடோன் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story