ஏரியூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலைகணவர் கைது

ஏரியூர்:
ஏரியூர் அருகே உள்ள செல்லமுடியை சேர்ந்தவர் முருகேசன். லாரி டிரைவர். இவரது மனைவி நவநீதா (வயது20). சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நவநீதா உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவநீதா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் தர்மபுரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





