விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம் அருகே உள்ள புதுப்பள்ளியை சேர்ந்தவர் நகேந்திரன் (வயது55). விவசாயி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார் இதனால் மனவேதனை அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





