தர்மபுரி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

தர்மபுரி
தர்மபுரி அருகே உள்ள சோலை கொட்டாயை சேர்ந்தவர் வேடி (வயது 55). விவசாயி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேடி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் வேடியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





