தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூர்

காங்கயம்

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா (36). திருமணமான இவர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் தற்போது காங்கயம் அய்யாசாமி நகர் பகுதியில் தங்கி லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் பாரதிராஜா குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, அதிலிருந்து மீண்டு வர முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாரதிராஜா கடந்த 7 -ந் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு கொண்டார். இதை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

------------

1 More update

Related Tags :
Next Story