தர்மபுரியில் விஷம் குடித்து பெண் தற்கொலை

தர்மபுரி:
தர்மபுரி செந்தில் நகரை சேர்ந்தவர் முருகன். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி எல்லம்மாள் (வயது 37). இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். எல்லம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி எல்லம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





