தூக்குப்போட்டு தற்கொலை


தூக்குப்போட்டு தற்கொலை
x

முத்துப்பேட்டை அருகே தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர்

முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை எம்.கே. நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் மகாலட்சுமி (வயது19). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டார். நேற்று மகாலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மகாலட்சுமி தாயார் அஞ்சம்மாள் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார், மகாலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story