சுந்தரர் குருபூஜை விழா

பசுபதி கோவிலில் சுந்தரர் குருபூஜை விழா
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் வெள்ளை விநாயகர் கோவிலில் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியிருக்கும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு திருமுறை விண்ணப்பமும், தொடர்ந்து சுந்தரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. இரவு சுவாமிமலை லலிதா வெங்கடேசனின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இறை பணி குழுவினர் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





