வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு


வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
x

போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு

திருப்பத்தூர்

வாணியம்பாடி

வாணியம்பாடி போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பரண்டாக ஆல்பர்ட் ஜான் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு ரோந்து மற்றும் வாகன தணிக்கை பணிகளை அவர் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

இந்த நிலையில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென அவர் ஆய்வு மேற்கொண்டார். வாணியம்பாடி போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர் போலீசார் எந்தெந்த இடங்களில் பணிகள் மேற்கொண்டுள்ளனர் என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் குற்றச்சம்பவங்கள் நடைபெற அச்சுறுத்தல்கள் இருக்கக்கூடிய இடங்களில் கண்காணிப்பை தீவிர படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், பழனி உள்பட போலீசார் உடன் இருந்தனர்.


Next Story