பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது..!


பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது..!
x

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

சென்னை,

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. பொதுப்பிரிவில் விண்ணப்பித்துள்ள 13,650 பேரில் 13,244 மாணவர்கள் துணை கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள 4,585 மாணவர்களில் 4,466 பேர் துணை கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் நாளை மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை பதிவு செய்யலாம்.

இன்று 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரையில் இணையவழியில் துணை கலந்தாய்வு நடத்தப்படும். அதன் பின்னா் பட்டியலினம், அருந்ததியா் பிரிவில் நிரம்பாமல் காலியாக உள்ள இடங்களில் எஸ்.சி. பிரிவினரை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப். 10, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story