தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சாயல்குடி,
சாயல்குடி அருகே உறைக் கிணறு கிராமத்தை சேர்ந்தவர் ராம பாண்டி மகன் நாகராஜ் (வயது21). இவர் வீட்டை விட்டு வெளியேறியபின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காத நிலையில் நேற்று சாயல்குடி செவல்பட்டி சாலையில் உள்ள கருவேலங்காட்டில் தூக்கிட்டு பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயச்சித்ரா தலைமை யிலான போலீசார் விரை சென்று உடலை கைப்பற்றி கடலாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





