இனிப்பு கடை விற்பனையாளர் திடீர் சாவு


இனிப்பு கடை விற்பனையாளர் திடீர் சாவு
x

இனிப்பு கடை விற்பனையாளர் திடீரென இறந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், தெரணி கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 42). இவர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு இனிப்பு கடையின் மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்து, அந்த கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அறையின் அருகே உள்ள கழிவறைக்கு சென்ற செல்வகுமார் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சக ஊழியர்கள் கழிவறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு செல்வகுமார் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story