தீயணைப்பு படை வீரர்களுக்கான நீச்சல் போட்டி


தீயணைப்பு படை வீரர்களுக்கான நீச்சல் போட்டி
x

தீயணைப்பு படை வீரர்களுக்கான நீச்சல் போட்டி நடந்தது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் தென் மண்டல அளவிலான தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணி துறை சார்பில் தீயணைப்பு படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இந்த போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டனர். முதல் நாள் போட்டியை தென் மண்டல தீயணைப்பு மீட்பு பணி துறை துணை இயக்குனர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். கடைசி நாளான நேந்று தீயணைப்பு வீரர்களுக்கான 50, 100, 200 மீட்டருக்கான நீச்சல் போட்டி காரைக்குடி தி லீடர்ஸ் பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இதில் 9 மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். தொடர்ந்து வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளும், மாலையில் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.


Next Story