புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நீச்சல் பயிற்சி


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நீச்சல் பயிற்சி
x

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நீச்சல் பயிற்சி நடைபெற்றது.

கரூர்

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1204 புதிய தீயணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தாம்பரம் மாநில பயிற்சி மையம் மற்றும் 8 தற்காலிக பயிற்சி மையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இந்த 8 பயிற்சி மையங்களில் ஒன்றான கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்களுக்கான தற்காலிக பயிற்சி மையம் துவங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 140 தீயணைப்பு வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களுக்கு 90 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு த்துறை அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் சந்திரகுமார் (கரூர்), துரை (நாகப்பட்டினம்), வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் மற்றும் 5 தீயணைப்பு நிலைய அலுவலர்கள், 10 முன்னணி தீயணைப்பு வீரர்கள், 10 தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் தீயணைப்பு வீரர்களுக்கு தீயணைத்தல், மீட்புப் பணிகள், விபத்துக்களில் இருந்து மீட்டல், மலையேற்றம் பயிற்சி, யோகா, தீயணைப்பு கருவிகளை இயக்குதல் நீர் விடு குழாய் பயிற்சி, உடற்பயிற்சி தடை தாண்டும் பயிற்சி, ஏனி ஏறுதல், கயிறு ஏறுதல்மற்றும் பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சுப் பயிற்சி மற்றும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story