தூத்துக்குடி சிவன் கோவிலில் தை அமாவாசை பத்ர தீப விழா


தூத்துக்குடி சிவன் கோவிலில் தை அமாவாசை பத்ர தீப விழா
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சிவன் கோவிலில் தை அமாவாசை பத்ர தீப விழா நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் நேற்று தை அமாவாசை மற்றும் பத்ர தீப விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 8.30 மணியில் இருந்து விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, ஹோமம், தீபாராதனை மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து இரவு கோவில் வளாகம் முழுவதும் பத்ர தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், பஞ்ச மூர்த்திகள் வெள்ளி வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.

1 More update

Next Story