பொறுப்பேற்பு


பொறுப்பேற்பு
x

புகழூர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் பொறுப்பேற்பு ஏற்றார்.

கரூர்

புகழூர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராக கோமதி என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராக பணியாற்றி வந்த சரவணன் பணியிட மாறுதல் பெற்று புகழூர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலராக பொறுப்பேற்றுகொண்டார். இதையடுத்து அவருக்கு தீயணைப்பு வீரர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story