கோபி புதிய போலீஸ் துணை சூப்பிரண்டு பொறுப்பேற்பு


கோபி புதிய போலீஸ் துணை சூப்பிரண்டு பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 24 Jun 2023 10:00 PM GMT (Updated: 26 Jun 2023 8:06 AM GMT)

கோபி புதிய போலீஸ் துணை சூப்பிரண்டு பொறுப்பேற்று கொண்டார்.

ஈரோடு

கடத்தூர்

கோபி போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சியாமளா தேவி பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த தங்கவேல் பதவி உயர்வு பெற்று கோபி போலீஸ் துணை சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கோபி புதிய போலீஸ் துணை சூப்பிரண்டாக தங்கவேல் பொறுப்பேற்று கொண்டார். புதிய போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேலுவை கோபி கோட்டத்துக்குட்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Related Tags :
Next Story