போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு


போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 12 Aug 2023 12:15 AM IST (Updated: 12 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குருவிகுளத்தில் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடம் தாலுகா குருவிகுளத்தில் உள்ள வளனார் கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ. ஆகியவற்றின் சார்பில் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும், விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ஜோசப் கென்னடி, கல்லூரி முதல்வர் அந்தோணி ராஜ், ஐ.டி.ஐ, முதல்வர் பாலமுருகன் மற்றும் மாணவர்கள் போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். பின்னர் மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை குருவிகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் தொடங்கி வைத்தார். பேரணி குருவிகுளம் முழுவதும் ஊர்வலமாக விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிய படி வந்தது. நிகழ்ச்சியில் கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ. உதவி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story