தமிழ்ச் செம்மல்விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்


தமிழ்ச் செம்மல்விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்
x

தமிழ்ச் செம்மல்விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

தமிழ்ச் செம்மல்விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச் செம்மல் என்ற விருது ஏற்படுத்தப்பட்டு தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது பெறுபவா்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்பு, 2 நிழற்படம், அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணி ஆகிய விவரங்களுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தமிழ்ச் செம்மல் விருது வேண்டுவோர் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருதுகள் ஏதும் இதற்கு முன் பெற்றிருக்கக் கூடாது. அகவை முதிர்ந்த தமிழறிஞர், எல்லைக் காவலர், தமிழறிஞர் நிதியுதவி பெற்று வருபவராகவும் இருத்தல் கூடாது.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

================

1 More update

Next Story