தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தென்காசியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முகமது யாகூப் தலைமை தாங்கினார். முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சலீம், மாவட்ட பொருளாளர் முகமது பாசித், மாநில செயற்குழு உறுப்பினர் இஸ்மத் மீரான், மாவட்ட துணைச் செயலாளர்கள் செய்யதலி, செய்யத் மசூது மஜீத், சேக் அப்பாஸ், கோதர் மைதீன், சித்திக், ம.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கொலம்பஸ் மீரான், பஷீர் ஒலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தலைமை பிரதிநிதி சாதிக் பாஷா, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன், தமிழர் விடுதலைக் களம் ராஜ்குமார், தமிழ் புலிகள் மாநில அமைப்பு செயலாளர் முகில் அரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங், சி.பி.எம். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் உட்பட பலர் பேசினார்கள். முடிவில் தென்காசி நகர தலைவர் சையது அலி நன்றி கூறினார்.


Next Story