தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.!


தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.!
x

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.!

சென்னை,

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இதில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவ தேர்வாகவும், 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வாகவும் நடைபெறுகிறது.

பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் படி பிளஸ்-2 மாணவர்களுக்கு மார்ச் 13 நாளை (திங்கட்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 மாணவர்களுக்கு 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்க வழக்கப்படும். இந்த தேர்வை மாணவர்கள் எந்தவித அச்சமும், பதற்றமும் இல்லாமல் எழுத வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கண்காணிப்பு ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை மாணவர்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது. தவிர, விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது.


பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தடையில்லாத மின்சாரம் வழங்குவதன் மூலம் மாணவர்கள், எந்தவித அச்சமும் இன்றி தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story