தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 2-வது நாளாக உண்ணாவிரதம்


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 2-வது நாளாக உண்ணாவிரதம்
x

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட கல்வித்துறையில் ஒன்றியம் விட்டு வேறு கல்வி மாவட்டத்திற்கு பல கிலோ மீட்டர் தொலைவிற்கு பணிமாறுதல் ஆணைகளை வழங்கிய கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியும், பணிமாறுதல் செய்யப்பட்ட 6 ஆசிரியர்களின் மாறுதல் ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டியும் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு 2-வது நாளாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேற்கு மண்டலம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில செயலாளர் சுனில்குமார் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட பொருளாளர் தமிழரசி வரவேற்றார். எஸ்.டி.எப்.ஐ. பொதுக்குழு உறுப்பினர் ஜான்கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு பேசினார். இதில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story