தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று - வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்


தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று - வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்
x
தினத்தந்தி 22 July 2022 9:42 AM GMT (Updated: 22 July 2022 9:42 AM GMT)

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஜூன் மாதம் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அண்மையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்கு பின்னர் கடந்த 18-ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இன்று முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதேபோல் அமைச்சர் நாசருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விருதுநகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story