தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x

போளூரில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் பிடித்தம் செய்த கரும்பு பயிர் கடனுக்கு விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் விவசாய கிளையை கண்டித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வங்கி முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க தலைவர் பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் உரையாற்றினார். போராட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு அனுப்பிய நோட்டீசை திரும்பி பெற வேண்டும். விவசாயிகளுக்கு கரும்பு பயிர் கடன் இல்லை என்ற தடையில்லா சான்று வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் ராம கவுண்டர் நன்றி கூறினார்.


Next Story