தமிழ் மாநில காங்கிரசார் கையெழுத்து இயக்கம்


தமிழ் மாநில காங்கிரசார் கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 23 May 2023 12:30 AM IST (Updated: 23 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கள்ளச்சாராயம், போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரசார் கையெழுத்து இயக்கம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது.

திண்டுக்கல்

தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடந்தது. இதற்கு இளைஞரணி மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இளைஞரணி மாநில துணை தலைவர் வெங்கடேஷ் கார்த்திக் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் வி.கே.என்.தண்டபாணி, முன்னாள் எம்.எல்.ஏ. தண்டபாணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும். தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொழுதுபோக்கு கூடங்களில் மதுபான விற்பனைக்கு அனுமதி அளித்த தமிழக அரசை கண்டித்தும் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று தமிழ் மாநில காங்கிரசார் சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த கோரிக்கை படிவத்தில் கையெழுத்திட்டனர்.

1 More update

Related Tags :
Next Story