ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு  உத்தரவு
x
தினத்தந்தி 6 Jun 2023 9:30 AM GMT (Updated: 6 Jun 2023 9:51 AM GMT)

7 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

7 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலராக பணீந்திர ரெட்டிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது .

போக்குவரத்து துறை ஆணையராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு துறை ஆணையராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையராக ரத்னா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.புவியியல் மற்றும் கனிமவளத்துறை இயக்குனராக ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிம்ரன்ஜீத் சிங் கஹ்லோன் - சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலசந்தர் - சேலம் மாநகராட்சி ஆணையாராக நியமிக்கப்பட்டுள்ளார்


Next Story