முன்னோர்களுக்கு தர்ப்பணம்


முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x
தினத்தந்தி 14 Oct 2023 7:00 PM GMT (Updated: 14 Oct 2023 7:01 PM GMT)

தூத்துக்குடி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை, திரேஸ்புரம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் கடலில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

இதேபோல் தூத்துக்குடி எஸ்.வி.கே. சபா மற்றும் தெப்பக்குளம் சுந்தரபாண்டிய விநாயகர் கோவில் பகுதியிலும் திரளான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.


Next Story