டாஸ்மாக் ஊழியர் தற்கொலை


டாஸ்மாக் ஊழியர் தற்கொலை
x

பனவடலிசத்திரத்தில் டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தலையாரி தங்கபாண்டியன். இவரது மகன் மகாராஜன் (வயது 45). டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், சொர்ணமாலிகா என்ற மகளும் உள்ளனர். மகாராஜனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகாராஜன் கதவை உட்புறமாக பூட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் மல்லிகா வீட்டிற்கு வந்தபோது மகாராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து மகாராஜன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story