டாஸ்மாக் பார் உரிமையாளர் மீது வழக்கு

டாஸ்மாக் பார் உரிமையாளர் மீது வழக்கு செய்யப்பட்டது.
திசையன்விளை:
சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது ஷபிர் ஆலம், திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் ஆயூப்கான் ஆகியோர் திசையன்விளை-உவரி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 15 வயது சிறுவனை வேலைக்கு வைத்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியாராஜ்குமார், பார் உரிமையாளர் கரூர் மாவட்டம் மூக்கனாங்குறிச்சி அம்மையப்பகவுண்டர் புதூரை சேர்ந்த பழனிசாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தார். மேலும் சிறுவன் அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





