அரசு பஸ் மோதி டீ மாஸ்டர் பலி


அரசு பஸ் மோதி டீ மாஸ்டர் பலி
x

மாத்தூர் அருகே அரசு பஸ் மோதி டீ மாஸ்டர் பலியானார்.

புதுக்கோட்டை

மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் புகழ்பாண்டி (வயது 23). இவர் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அண்ணா பல்கலைக்கழகம் அருகே உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் புகழ்பாண்டி தங்கும் அறையில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இரவு வேலை செய்வதற்காக திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் செப்பிளாந்தோப்பு என்ற இடத்தில் சென்றபோது எதிரே துறையூரை சேர்ந்த குமார் (40) என்பவர் ஓட்டிச் சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக புகழ்பாண்டி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட புகழ்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புகழ்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story