வாலிபரை தாக்கிய டீக்கடைக்காரர் கைது


வாலிபரை தாக்கிய டீக்கடைக்காரர் கைது
x

பணகுடியில் வாலிபரை தாக்கிய டீக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடியை அடுத்த ஸ்ரீ ரெகுநாதபுரத்தை சேர்ந்த பால்பாண்டி மகன் ரமேஷ் (வயது 44) இவர் டீக்கடை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள ஒரு பெண் வீட்டிற்கு வடலிவிளையை சேர்ந்த பால்ராஜ் மகன் மகராஜன் (25) என்பவர் அடிக்கடி வந்து போவாராம். இதனால் ரமேசுக்கும், மகராஜனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மகராஜன் அந்த பெண் வீட்டிற்கு வந்த போது ரமேஷ் அங்கு வந்துள்ளார் இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ரமேஷ், கம்பால் மகராஜனை தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

1 More update

Next Story