வடை, பாயசத்துடன் வாழை இலையில் மதிய உணவு வழங்கிய ஆசிரியர்கள்


வடை, பாயசத்துடன் வாழை இலையில் மதிய உணவு வழங்கிய ஆசிரியர்கள்
x

வடை, பாயசத்துடன் வாழை இலையில் மதிய உணவு வழங்கிய ஆசிரியர்கள்

திருவாரூர்

ஜாம்புவானோடை தெற்குகாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வடை, பாயசத்துடன் வாழை இலையில் மதிய உணவை ஆசிரியர்கள் வழங்கினர்.

அரசு பள்ளி மாணவர்கள்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா ஜாம்புவானோடை தெற்குகாடு அரசினர் தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இந்த மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.

தேர்வு முடிந்தவுடன் இந்த ஆண்டு பள்ளி நிறைவடையும் என்பதால் மாணவர்களுக்கு வாழை இலையில் வடை, பாயசத்துடன் மதிய உணவு வழங்க ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

வடை, பாயசத்துடன் மதிய உணவு

அதன்படி நேற்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வாழை இலை போட்டு 5 வகையான கூட்டு, பொரியல் மற்றும் வடை, பாயசத்துடன் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவுகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கினர்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் விஜயராணி மற்றும் ஆசிரியர் எழிலரசி ஆகியோர் செய்து இருந்தனர். வாழை இலையில் வடை, பாயசத்துடன் மதிய உணவு வழங்கிய ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.


Next Story