தொழில்நுட்ப மைய புதிய கட்டிடங்கள்


தொழில்நுட்ப மைய புதிய கட்டிடங்கள்
x

தொழில்நுட்ப மைய புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மற்றும் விராலிமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், தொழில் 4.0 திட்டத்தின் கீழ், டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து, ரூ.34.64 கோடி மதிப்பீட்டில் எந்திரங்கள், தளவாடங்களுடன் கூடிய அதிநவீன தொழில்நுட்ப மைய புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் மெர்சி ரம்யா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, உயர் தொழில்நுட்ப எந்திரங்களை பார்வையிட்டார். இந்த அதிநவீன தொழில்நுட்ப மையத்தில், மேனுபாக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் டெக்னீசியன் ஆகிய ஒரு வருட தொழிற்பிரிவுகளும், அட்வான்ஸ் சி.என்.சி. மெஷினிங் டெக்னீசியன், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிகிள் ஆகிய 2 வருட தொழிற்பிரிவுகளும், ஐ.ஓ.டி, பிராசஸ் கண்ட்ரோல், ப்ராடக்ட் டிசைன், ஆட்டோ எலக்ட்ரிக் மெயின்டனன்ஸ், அட்வான்ஸ்டு பெயிண்டிங் போன்ற 23 தொழிற்பிரிவுகளில் குறுகிய கால பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது. இதுநாள் வரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், அடிப்படை தொழிற்பிரிவுகளில் மட்டுமே பயிற்சி பெற்று வந்த பயிற்சியாளர்கள் இனிவரும் காலங்களில் கூடுதலாக மேம்படுத்தப்பட்ட திறன் பயிற்சி பெறும் வகையில், இந்த அதிநவீன தொழில்நுட்ப மையம் மிகவும் பயனுள்ளதாக அமையும். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, மாவட்ட கருவூல அலுவலர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story