இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x

வடக்கன்குளம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் பழவூர் அருகே உள்ள சிதம்பராபுரம் மேல அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லிங்கராஜா. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பானு (வயது 28). இவர் கடந்த சில வருடங்களாக தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டு, மாத்திரை தின்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் நோய் குணமாகாததால் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பானு வீட்டில் இருந்த எறும்பு பொடியை கரைத்து குடித்து, மயங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பானு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story