விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை


விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
x

கண்ணமங்கலம் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள கல்குப்பம் அரிமா நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் மவுனிகா (வயது 19).

இவர் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை செய்து வந்தார்.

கல்லூரி படிக்கும்போது இவரும் பள்ளக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரும் காதலித்தனர். பின்னர் இரு வீட்டில் பேசி திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் சந்தோஷ், தனது சகோதரிக்கு திருமணம் முடிந்தபின், இருவரும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என தாமதம் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி பள்ளக்கொல்லை கிராமத்தில் உள்ள சந்தோஷ் வீட்டுக்கு சென்ற மவுனிகா திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்.

ஆனால் சந்தோஷ் தனது சகோதரி திருமணம் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மவுனிகா விஷம் குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து மவுனிகாவின் தாய் சாந்தி கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story