மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி
x

நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலியானார்.

கரூர்

தவறி விழுந்தார்

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள சின்னாண்டிபட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 25). இவரது மனைவி உமா மகேஸ்வரி (21). இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆனந்தகுமார் தனது மோட்டார் சைக்கிளில் தானியாளம்பட்டியில் இருந்து சின்னாண்டிபட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அரசு மாணவர் விடுதி அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்துள்ளது.

இதனால் அதன் மீது மோதாமல் இருப்பதற்காக ஆனந்தகுமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். இதில் பின்னால் அமர்ந்து இருந்த உமா மகேஸ்வரி தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

பலி

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த உமா மகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் உமா மகேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து உமாமகேஸ்வரியின் உறவினர் நாகரத்தினம் கொடுத்த புகாரின்பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story